இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, புத்தளம் பிராந்தியத்தின் ஹிஜ்ரி 1442 இற்கான வருடாந்த அங்கத்தவர் கூட்டம் கடந்த 2020.10.01 வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தளம் பிராந்திய அமைப்பாளர் சகோதரர் எம்.எஸ்.எம். நபீல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ் ஷெய்ஹ் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி அவர்களும் கௌரவ அதிதியாக பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் ‘பன்மைத்துவ கலாசார சமூகங்களுக்கு மத்தியில் முஸ்லிம் தலைவர்களது பங்களிப்பு’ எனும் கருப்பொருளில் விஷேட உரை நிகழ்த்திய கௌரவ அதிதி பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள், வரலாறு நெடுகிலும் இலங்கை முஸ்லிம் சமூகமும் அதன் தலைவர்களும் பன்மைத்துவ கலாசாரங்களுக்கு மதிப்பளித்து தமது பங்களிப்புக்களை வழங்கி வந்துள்ளமைக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எமது வரலாற்றை மீள்வாசிப்புச் செய்து எமது முன்னுதாரண புருஷர்களிடம் பாடங்கள் கற்று இந்நாட்டின் பன்மைத்துவ கலாசார சமூகங்களுக்கு மத்தியில் இணைந்து வாழ வேண்டியது எமது பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.
நிகழ்வின் விஷேட அம்சமாக சகோதர சமய பெரியார்கள், பொலிஸ் அதிகாரிகள், சமய, சமூக, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற பிரமுகர் அமர்வு இடம்பெற்றது. இதன்போது ரம்ய லங்காவின் தலைவர் சட்டத்தரணி பாரிஸ் ஸாலி அவர்கள் சிறப்புரை ஆற்றியதுடன் ரம்ய லங்காவின் அனுசரணையில் பிரமுகர்களுக்கு மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நிகழ்வில் கடந்த வருடத்திற்கான செயற்பாட்டறிக்கைகள், நிதியறிக்கைகள், சமூக, பிராந்திய பங்களிப்புக்கள் என்பவற்றின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. கடந்த ஆறு தசாப்தங்களாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மேற்கொண்டு வரும் சமய, சமூக, தேசிய பங்களிப்புக்கள் குறித்த சுருக்கமான தெளிவும் அளிக்கப்பட்டதுடன் புதிய பிராந்திய ஆலோசனை சபை தெரிவும் இடம்பெற்றது. புத்தளம் பிராந்தியத்தின் புதிய அமைப்பாளராக வைத்தியர் ஜே.எம். நைஜீல் தெரிவு செய்யப்பட்டார்.
ஊடகப் பிரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
පුත්තලම් ප්රාන්ත වාර්ෂික සාමාජික රැස්වීම
ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධානයේ පුත්තලම් ප්රාන්තයේ හිජ්රි 1442 වර්ෂය සඳහා වූ වාර්ෂික සාමාජික රැස්වීම 2020 ඔක්තෝම්බර් 01 වෙනි බ්රහස්පතින්දා පෙ.ව 8.30 සිට ප.ව 2.30 දක්වා පුත්තලම නගර සභා පරිශ්රයේදී පවත්වන ලදි.
පුත්තලම ප්රාන්ත සංවිධායක එම්.එස්.එම්. නෆීල් සහෝදරායාගේ මූලිකත්වයෙන් පවත්වන ලද මෙම රැස්වීමේ ප්රධාන ආරාධිතයා වශයෙන් ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධානයේ සභාපති අෂ් ෂේයික් එම්.එස්.එම්. උසෛර් (ඉස්ලාහි) මහතා සහභාගි වූ අතර ගෞරව ආරාධිතයා වශයෙන් මහාචාර්ය එම්.එස්.එම්. අනස් මහතා සහභාගි විය.
මෙහිදී විවධත්ව සංස්කෘතික ප්රජා මධ්යයේ මුස්ලිම් නායකයන්ගේ දායකත්වය යන මාතෘකාවේ විශේෂ දේශනයක් කළ ගෞරව ආරාධිත මහාචාර්ය එම්.එස්.එම්. අනස් මහතා තම කථාවේදී, “ඉතිහාසය මුළුල්ලේම ශ්රී ලංකා මුස්ලිම්වරු හා එහි නායකයින් සංස්කෘතික විවිධත්වය අගය කොට තම දායකත්වය සපයා ඇති බවට බොහෝ සාධක ඇත. අපගේ ඉතිහාසය නැවත කියවා එම ආදර්ශවත් පුරුෂයින්ගෙන් පඩම් ඉගෙනගෙන මෙරටේ විවිධත්ව සංස්කෘතික ප්රජාවන් මධ්යයේ එක්සත්ව ජීවත්වීම අපගේ වගකීමවේ.” යනුවෙන් සඳහන් කළේය.
රැස්වීමේ විශේෂ සිදුවීමක් වශයෙන් ආරාධිත අමුත්තන්ගේ සහභාගිත්වයෙන් සැසියක් පැවැත්විය. ආගමික නායකයින්, පොලිස් නිලධාරීන්, ආගමික සමාජයීය සිවිල් සංවිධානවල නියෝජිතයෝ රැසක් මෙම අවස්ථාවට සහභාගි වූහ. මෙහිදී රම්ය ලංකා සභාපති නීතිඥ ෆාරිස් සාලි මහතා විශේෂ දේශනයක් කළ අතර රම්ය ලංකා සංවිධානයේ අනුග්රහයෙන් ආරාධිත අමුත්තන්ට පැළ ලබාදීමේ වැඩසටහනක්ද ක්රියාත්මක කරන ලදි.
මෙම රැස්වීමේදී ඉකුත් වසර සඳහා වූ ක්රියාකාරකම් වාර්ථා, මූල්ය වාර්ථා, සමාජ ප්රාන්ත දායකත්වය පිළිබඳ වාර්ථා සභා ගත කරන ලදි. ඉකුත් දශක හයක් තිස්සේ ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධානය නිරතව සිටින ආගමික සමාජයීය ජාතික දායකත්වයන් පිළිබඳ කෙටි විස්තරයක්ද සභා ගත කරන ලද අතර නව වසර සඳහා වූ උපදේශක සභාවක්ද තෝරාපත් කරන ලදි. පුත්තලම් ප්රාන්තයේ නව සංවිධායක වශයෙන් වෛද්ය ජේ.එම්. නෛජීල් මහතා තෝරාපත් විය.